இறைவனின் ஆசனம்
(மூன்றாம் இறுதி பகுதி)
எண்ணற்ற மக்களுக்கு அகக்கண்ணை திறந்த மெய்ஞ்ஞான பேரரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், 'மெய்ஞ்ஞான வழி பயணத்தின் முதலாவது குறிகோள் உளத்தூய்மையே' என்றார்கள்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள், 'என் எஜமானனின் ஒளியைக் கொண்டே என் இதயம் எஜமானனைக் காண்கிறது' என்று கூறினார்கள் என்றால் அவர்களது இதயம் எப்படி கண்ணாடியாகி இறை அத்தாட்சியை பிரதிபலித்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருமானாரின் வரலாற்றை உள்ளத்தால் படிக்க வேண்டும். நபித்தோழர்கள் வரலாற்றை சிந்திக்க வேண்டும்.
உள்ளத்தை தூய்மை படுத்துவது சிரமமான காரியம் தான். அதற்கு சில அல்லது பல தியாகங்கள் புரிய வேண்டும்.
இறைவன் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். நமக்குள் இரகசியமாக இருக்கிறான். அதான் தான் இறைவன் மனிதனை படைத்த பிறகு 'என் இரகசியமே..' என்று கூறியதாக ஹதீஸ்குத்ஸி உள்ளது.
நாம் நம் இறைவன் அமரும் ஆசனமான இதயத்தை தூய்மைப் படுத்த தவறி விட்டால் மனிதர்களை நான் படைக்க போகிறேன் என்று இறைவன் கூறிய போது மலக்குகள் நகைத்தது மிகை அல்ல என்றாகி விடும்.
முற்றும்
முஹம்மது இஸ்மாயில்
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள், 'என் எஜமானனின் ஒளியைக் கொண்டே என் இதயம் எஜமானனைக் காண்கிறது' என்று கூறினார்கள் என்றால் அவர்களது இதயம் எப்படி கண்ணாடியாகி இறை அத்தாட்சியை பிரதிபலித்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருமானாரின் வரலாற்றை உள்ளத்தால் படிக்க வேண்டும். நபித்தோழர்கள் வரலாற்றை சிந்திக்க வேண்டும்.
உள்ளத்தை தூய்மை படுத்துவது சிரமமான காரியம் தான். அதற்கு சில அல்லது பல தியாகங்கள் புரிய வேண்டும்.
இறைவன் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். நமக்குள் இரகசியமாக இருக்கிறான். அதான் தான் இறைவன் மனிதனை படைத்த பிறகு 'என் இரகசியமே..' என்று கூறியதாக ஹதீஸ்குத்ஸி உள்ளது.
நாம் நம் இறைவன் அமரும் ஆசனமான இதயத்தை தூய்மைப் படுத்த தவறி விட்டால் மனிதர்களை நான் படைக்க போகிறேன் என்று இறைவன் கூறிய போது மலக்குகள் நகைத்தது மிகை அல்ல என்றாகி விடும்.
முற்றும்
முஹம்மது இஸ்மாயில்